உலக தமிழ் செம்மொழி Headline Animator

Tuesday, June 15, 2010

கோவில்களும் கோபுரங்களும்


கோவில்களின் முகப்பு நிலைகளை அலங்கரிக்கும் பிரதான கோபுரங்கள் “இராஜ கோபுரங்கள்”. “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்”. மாட்டிடன் உள்ள பாலை காம்பு வழியாக கறப்பது எளிதானது அதுப்போல் எங்கும் நீக்குமற நிறைந்த இறைவனை எங்கு சென்று தரிசிப்பது என்று திகைக்கும் மானிடரை இங்கே வாருங்கள் என்று வழிக்காட்டி அழைக்கின்றன் விண்ணை முட்டும் படி ஒங்கி உயர்ந்து நிற்க்கும் இராஜ கோபுரங்கள்.
இராஜாக்களின் ஆட்சியின் சிறப்புகளையும், செல்வநிலைகளையும், பழம் பெருமைக் கொண்ட இந்தியாவின் இணையற்ற ஓவியம் மற்றும் சிற்ப கலைகளையும், தொன்மையான பழக்கவழக்கங்களயும் வருங்கால சந்ததியினரும் அறிந்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை முன்னிட்டு அமைக்கப்பட்ட கோவில்களும் கோபுரங்களும் இன்று போதுமான கவனிப்பு இன்றி சிறப்பிழக்கின்றன.
பழங்காலத்தில் தற்பெருமையால் மற்றவர்களை மதிக்காமல் இருக்க கூடாது என்பதற்காக அவன் இன்றி அவனியில் ஓர் அணுவும் அசையாது. அணுவுக்குள் அணுவாய் இருக்கும் இறைவனே ஆளும் அரசனைவிட பெரியவன் என்பதை மனம் மறக்கக்கூடாது என்பதற்காக தான் அரண்மனைகளை விட ஆலயங்களை உயர்ந்ததாக கட்டியுள்ளனர்.
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் இணையற்ற இயந்திர நூதனங்களைக் கொண்டு அழகழகாய் ஆயிரம் கட்டிடங்களைக் கட்டினாலும், எந்தவிதமான உபகரணங்களின் வசதிகள் இன்றி ஆண்டவனின்ஆசியால் முழுக்க முழுக்க மனிதமுயற்சியால் கட்டப்பட்ட கோவில்களுக்கும் கோபுரங்களுக்கும் எதுவும் நிகராகாது.



“கிருத யுகம், திரோத யுகம், துவாபர யுகம், கலியுகம் என்ற நான்கு காலக்கட்டங்களில் தர்மத்தை நான்கு கால்களாக கொண்ட காமதேனு இந்த கலியுகத்தில் தர்மத்தை ஒரு காலாக மட்டும் கொண்டு தடுமாறி நிற்க்கும் நிலையிலும் தலைக்குனிந்து வீழாமல் காக்கும் கோவில்களில் பல, பலவகைப்பட்ட அன்னியர்களின் ஆதிக்கத்தில் அடிமைபடுத்த போதும், நசுக்கப்பட்ட போதும், சிதைக்கப்பட்ட போதும் சில கோவில்கள் அசையாமல் நின்று இந்தியாவின் இணையற்ற காவியங்களையும், காப்பியங்களையும், வேதங்களையும் காப்பாற்றிக் கொடுத்துடன் அல்லாமல் தங்களின் ஆண்டாண்டு பழமைகளை பறைசாற்றி பெருமைகளை வானாளி சொல்லுகின்றதற்க்கு அத்தாட்சியாய் காட்டுகின்றன இந்த இராஜகோபுரங்களை.


இந்திய தேசம் இயற்கையை சார்ந்த தேசம், அதைக் கொண்டே தொழில்கள் நடத்தப்பட்டு மக்களின் பொருளதார நிலையும் வாழ்க்கைத்தரமும் நிர்ணயிக்கப்பட்டது. அவர்களின் வாழ்க்கைத் தொடர்ந்து செம்மையாக நடக்கும் வகையில் அவர்களுக்கு கூலித்தரும் வகையிலும், புண்ணியம் கிடைக்கும்படியும், போரில் வென்றதற்க்கும், புலவர்களின் புகழ்பாமாலைக்கும் என பல்வேறு தன்மைகளுக்காக கட்டப்பட்ட தனித்துவம் பெற்ற கோவில்களின் கோபுரங்களின் இன்றைய நிலையை சொல்லவும் மனம் அஞ்சுகின்றது.
மேற்கூறியத்தற்க்கும் மேற்ப்பட்ட பல்வேறு சிறப்புகளை உடைய கோவில்களும் கோபுரங்களும் இன்று இயற்கையால் மட்டுமல்லாமல் மனிதனாலும் சிதைக்கப்படுகின்றன. புறக்கண்ணுக்குத் தெரியும் செல்வங்களைப் பாதுகாக்கும் நாம் பழம் பெருமைகளை விளக்கும் கோவில்களையும் கோபுரங்களையும் பாதுகாக்க தவறிவிட்டோம். பாதுகாக்கவில்லை என்றாலும் பரவாயில்லை பாழ்படுத்தாமலாவது இருக்கலாம். பாதுகாப்பதும், பாழ்படுத்தாமல் தடுப்பதும் அரசின் வேலை என்று எல்லாச்செயல்களுக்கும் அரசை நோக்கி ஆள்காட்டிவிரலை காட்டுகிறோம். அரசைச்சுட்டி ஒருவிரல் காட்டும் நம்மை நோக்கி மடங்கியிருக்கும் மற்றவிரல்கள் நீ என்ன செய்தாய் என்பதைப்போல் காட்டுவதை மறந்து போகின்றோம். தனிப்பட்ட முறையில் நம்மால் முடிந்த கடமைகளை நாம் ஒழுங்காக செய்தாலே கோவில்களில் இறைவன் இச்சையுடன் இருப்பான். நம் இன்னல்களையும் தீர்த்து வைப்பான். அரசும், இந்து அறநிலையத்துறை, தொல்பொருள் பாதுகாப்புத்துறை முதலியவற்றின் மூலம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருந்தாலும் பொதுமக்களாகிய நம்முடைய செயல்பாடு அதிமுக்கியமானது.




இறைவனை மந்திரத்தால் இருக்கச் செய்வதைவிட மனதால் இருக்கச் செய்ய வேண்டும். அதற்கு கோவில்களையும், சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைக்க வேண்டும். நாம் மட்டுமே இருக்கும் வீட்டை சுத்தமாக வைத்து கொள்ளச்செய்யும் முயற்சிகளில் சிலவற்றையாவது ஆலயங்களில் செயல்படுத்தலாம். பொதுவாக, ஓதுக்கப்பட்ட இடங்களில் கற்பூரம், விளக்குகளை ஏற்றலாம். கோவிலில் தரும் பிரசாதங்களை அங்கேயே கொட்டாமல் இருக்கலாம். குப்பைகளை அதற்குரிய இடத்தில் போடலாம். பிராத்தனை, பரிகாரங்கள் என்ற பெயரில் பொது இடங்களில் பூசணிக்காய், தேங்காய், எலுமிச்சை போன்ற மற்றும் பல பொருட்களை உடைக்காமல், கொட்டாமல் நசுக்காமல் இருக்கலாம். பழித்தீர்க்க என்று பொதுச்சொத்துக்களுக்கு ஊறுவிளைவிக்காமல் இருக்கலாம். பணத்துக்காக என்று சிற்பங்களையும், சிலைகளையும் கடத்தாமல் இருக்கலாம். இதுப்போல் பல்வேறு தீயச்செயல்களை செய்யாமலும், மற்றவர்களுக்கு தீமைவிளைவிக்காமலும் இருந்தாலே ஆண்டவன் ஆலயத்தில் மட்டுமல்லாமல் நம்முடைய ஆன்மாவிலும் நிரந்தர வாசம் செய்வான்.







ஆறு இல்லா ஊரில் அழகு பாழ். கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழிகளுக்கு காரணம் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். நாட்டின் பசுமைக்கு நீர் முக்கியம் என்பதையும், இடி, மின்னல் போன்ற இயற்கை சீரழிவுகளிலில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காகவும் மறைப்பொருளாக வழக்கில் இருந்த சொற்றொடர்கள். கோபுரங்களின் கலசங்களில் இடம்பெற்றிருக்கும் சில சமித்துக்கள் இயற்கையின் சீற்றங்களைக்கட்டுப்படுத்தும். ஆனால் அவற்றை 12 ஆண்டுகளுக்கு ஓருமுறை புதுப்புக்க வேண்டும் என்பதற்காக நடைமுறையில் கையாளப்பட்டுவரும் பழக்கமே கோவில்களின் கும்பாபிஷேகம்.


இந்த நூற்றாண்டில் எவ்வளவு அதிவேகத்தில் அறிவியல் கண்டுப்பிடிப்புகளால், உலகத்தை உள்ளங்கையில் வைத்திருந்தாலும், நொடிக்கு நொடி உலகத்தின் நடப்புகளை அறிந்துக் கொண்டாலும், விஞ்ஞானத்தின் மூலமாய் வானத்தையே வசப்படுத்தி இருந்தாலும், நம் வாழ்க்கையின் போக்கையும் மனத்தின் மாற்றங்களையும் அறிந்துக் கொள்ள ஆண்டவன் குடிக்கொண்டு இருக்கும் ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைக்கின்ற ஆன்மீககுணத்தில் மாற்றமில்லை. அதனால் தான் இப்போதும் பல்வேறு காரணங்களைக் கொண்டு பலவாறாக கோவில்கள் புதிது புதிதாக கட்டப்படுகின்றன. புதிது புதிதாய் ஆலயங்களை அமைப்பதை விட சிதைந்து புதர் மண்டி அழிவின் விளிம்பில் உள்ள ஆலயங்களை புணர் அமைக்கலாம். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான், உண்டிக்கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்ற பழமொழிகளுக்கு ஏற்ப கல்விநிலையங்களையும், அன்னச்சத்திரங்களையும், தொழிற்சாலைகளையும் ஏற்படுத்தி ஏழைஎளியமக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தலாம்.



அறிவியல் முன்னேற்றம் ஏற்படும் அதே வேகத்தில் ஆன்மீகத்திலும் முன்னேற்றம் காணப்படுவது மனதுக்கு சந்தோஷத்தை தருகின்ற அதே நேரத்தில் ஆன்மீகம் என்ற பெயரில் சிலர் செய்யும் அக்கிராமங்களால் மனம் பதைக்கின்றது. ஆன்மீகத்தின் மூலமாய் ஆண்டவனை அடையச் செய்பவனே குரு. அதற்கு இல்லறம் தடையல்ல, தன் கடமைகளை ஒழுங்காய் செய்தாலே இறைவன் இச்சையுடன் இதயத்தில் குடியிருப்பான். இதயத்தில் இறைவன் குடியிருக்க இன்பமன்றி துன்பமில்லை. நம் மனத்தின் எண்ணங்களை ஓழுங்குபடுத்தாதவரை மற்றவர்களால் நம் துயர் தீர்க்க முடியாது. அப்படி இருக்க சாமியார்கள் என்று கூறிக்கொள்பவர்களை நாடிச்சென்று நம் பணத்தையும் நேரத்தையும் வீணடித்து ஆன்மீகப்பணிகளை வியாபாரமாக்கி விடுகின்றோம்.


“மனம் போல் வாழ்க்கை என்பதை உணர்ந்து செயல்படுவோமாக.


புராதான கோவில்களையும் கோபுரங்களையும் காப்போமாக