உலக தமிழ் செம்மொழி Headline Animator

Sunday, May 2, 2010

கற்றுக்கொள்

கற்றுக்கொள்
பூக்களிடமிருந்து குலுங்கிச் சிரித்திடவும்
வண்டுகளிடமிருந்து இனிது பாடிடவும்

மரத்தின் வளைந்த கிளைகளிடமிருந்து தலை வணங்கவும்
கொடிகள் மற்றும் மரங்களிடமிருந்து அனைவரையும்
அன்பினால் அரவனைக்கவும்

மீன்களிடமிருந்து தாயகத்திற்காகத் துடிதுடித்து மாளவும்
இலையுதிர்கால மரங்களிடமிருந்து துக்கத்தில் தைரியத்துடன் இருந்திடவும்

விளக்கிடமிருந்து இயன்றவரை அறியாமை இருளைப் போக்கிடவும்
பூமியிடமிருந்து உயிரினங்களுக்கு உண்மையான சேவை புரியவும்

மழைத்துளிகளிடமிருந்து அனைவரிடமும் அன்பைப் பெருக்கிடவும்
மருதாணியிடமிருந்து நம் பண்பின் தாக்கம் அனைவர் மீதும் படர்ந்திடவும்

சூரியகிரணங்களிலிருந்து எழவும், எழுப்பவும்
காற்றின் அலைகளிலிருந்து அசையவும், அசைத்திடவும்
பால் மற்றும் தண்ணீரிலிருந்து சேரவும்; சேர்க்கவும்
சான்றோர்களின் வாழ்விலிருந்து உனது குணநலனை அமைத்திடவும்— தினமும் கற்றுக்கொள்
பிறர் தள்ளும் முன்னால் நீயாக விழ வேண்டாம்

எந்த தவற்றை பிறரிடம் நீகண்டாலும் முதலில் அதைஉன்னிடத்தில் திருத்திக்கொள்

நண்பனை தனிமையில் கடிந்துக்கொள்; பிறர் முன்னிலையில் புகழ்

தளராத இதயம் உடையவனுக்கு இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமில்லை

வறுமையிலும் நிறைவு காணும் ஏழையே மிகப்பெரிய செல்வனாவான்

வாயைக் காப்பவன் தன் வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்கிறான்

கடமையைச் செய்; புகழ் மாலை உன் காலடியில் கிடக்கும்
செல்வாக்கு நாய் போல் பின்னால் வரும்

உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளம் பணிவாக இருத்தல்

பணம் பேச தொடங்கும் போது உண்மை ஊமையாகி விடும்

குற்றம் செய்யக் காரணம் தேவையில்லை, சந்தர்ப்பம் போதும்

No comments:

Post a Comment